விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற வரவேற்பு விழா.!
விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 01 மாணவர்கள் வரவேற்பு விழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் புதிதாக தரம் 01 வகுப்புக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது நேற்றையதினம் பாடசாலை அதிபர் திரு.தம்பிராசா தவராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் புதிய மாணவர்கள் மற்றும் அதிதிகள் பேன்ட் வாத்திய குழுவினரின் வாத்திய மரியாதையுடன் மலர் மாலைகள் அணிவித்து பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் மாணவர்களின் மழலைகுரலில் வரவேற்பு உரை மற்றும் சிறார்களின் கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசில்களும் அனுரனையாளர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகளின் உரையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உத்தியோத்தர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடாலை அபிவிருத்தி குழுவினர், அனுசரனையாளர்கள், திருக்கோவில் மக்கள், வங்கி முகாமையாளர், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

