அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு.!
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான உறுதி மொழி சத்தியப் பிரமாணம் மாவட்ட இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது தேசிய கொடியேற்றல் மற்றும் மங்கள விளக்கேற்றல் அறநெறி கீதம் இசைத்தலுடன் ஆரம்பமாகியது.
அதனை தொடந்து உறுதி மொழி எடுத்தல் மற்றும் அதிதிகள் உரைகள் என்பன இடம்பெற்றதுடன் அறநெறி ஆசிரியர்களுக்கான குறிப்பேடுகளில் கையோப்பம் இடும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட கலாச்சாரப் பிரிவின் மாவட்ட உத்தியோத்தர் ஜெயராஜி மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் ரெட்ணம்.சுவாகர் மற்றும் மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.பிரதீப், திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் A.மனோகரன், திருக்கோவில் பிரதேச இந்து சமய கலாச்சார உத்தியோத்தர் திருமதி நிஷாந்தினி தேவராஜ் மற்றும் காணிப்பிரிவு உத்தியோத்தர் திரு.கோவிந்த சாமி மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.சனாதனன் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
