உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான உறுதி மொழி சத்தியப் பிரமாணம் மாவட்ட இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது தேசிய கொடியேற்றல் மற்றும் மங்கள விளக்கேற்றல் அறநெறி கீதம் இசைத்தலுடன் ஆரம்பமாகியது.

அதனை தொடந்து உறுதி மொழி எடுத்தல் மற்றும் அதிதிகள் உரைகள் என்பன இடம்பெற்றதுடன் அறநெறி ஆசிரியர்களுக்கான குறிப்பேடுகளில் கையோப்பம் இடும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட கலாச்சாரப் பிரிவின் மாவட்ட உத்தியோத்தர் ஜெயராஜி மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் ரெட்ணம்.சுவாகர் மற்றும் மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.பிரதீப், திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் A.மனோகரன், திருக்கோவில் பிரதேச இந்து சமய கலாச்சார உத்தியோத்தர் திருமதி நிஷாந்தினி தேவராஜ் மற்றும் காணிப்பிரிவு உத்தியோத்தர் திரு.கோவிந்த சாமி மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.சனாதனன் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0