விநாயகபுரம் மண்ணின் மைந்தன் சரிகமப பாடகர் சபேசன் கௌரவிப்பு.!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் மண்ணின் மைந்தன் சரிகமப பாடகர் திரு.S.சபேசன் அவர்களை வரவேற்கும் மற்றும் கௌரவிற்கும் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் இந்து இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் Thiraviyaraj Rasarethinam அவர்களின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இவ் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் ஆலயங்களின் அனுசரனையில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று மருதையடி பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று பாடகர் சபேசன் அவர்கள் ஆலய நிர்வாகத்தினரினால் மாலை அணிவித்து வரவேற்பு ஆரம்பமாகி பின்னர் வாகன பவனியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் வரை அழைத்துவரப்பட்டு பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செலகத்தின் கலாச்சார மண்டபத்தில் பாடகர் சபேசன் அவர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னம் மற்றும் வாழ்த்துப்பா என்பன வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்பு, ஊடக குழுவினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும் சபேசன் அவர்களின் தாய் தந்தையரும் குறித்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்களும் இந் நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

