பொத்துவில் ரொட்டை கிராமத்தில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.!
அம்பாறை மாவட்டம் பொத்துவில் ரொட்டை கிராமத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 20 மீனவ குடும்பங்களுக்கு அம்பாறை மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியத்தினால் உலர் உணவுப் பொதிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது ரொட்டை கிராம மீனவர் சங்க தலைவரின் வேண்டு கோளுக்கிணங்க அம்பாறை மாவட்ட சிவில் சமூங்களின் ஒன்றியத்தின் பொத்துவில் பிரதேச இனணப்பாளர் திரு.சுபாஜினி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளரும் ஆலையடிவேம்பு பிரதேச ஊடகவியலாளருமான திரு.செல்வி விநாயகமூர்த்தி மற்றும் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர் ஆறுமுகம் அசோக்கா மற்றும் தம்பிலுவில் கிராம சமூக சேவையாளரும் இளம் சமூக ஊடகவியலாளருமான ஜே.கே.யதுர்ஷன் மற்றும் ரொட்டை கிராம மீனவர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டர்.



