உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

உயர்கல்வித் துறை பற்றிய உபக்குழு கூடியது

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
114 பார்வைகள்

பல்கலைக்கழகப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையை மிகவும் திறம்பட முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் ஆலோசனை

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில், உயர்கல்வித் துறை பற்றிய உபக்குழு 2026.09.10 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் கூடியது. பல்கலைக்கழகங்களின் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறை மற்றும் பகிடிவதையை ஒழித்தல் குறித்து இதன்போது முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது.

பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் கல்விசாராப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறையில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்குரிய ஆட்சேர்ப்பு முன்னேற்ற விபரம் அடங்கிய அறிக்கையொன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டது.

அத்தோடு, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தற்போது நிலவும் கல்வி மற்றும் கல்விசாராப் பணியாளர் ஆட்சேர்ப்புகளின் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்த பிரதமர், அதனை மிகவும் திறமையான வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். மேலும், தற்போது பணியாளர் ஆட்சேர்ப்புச் செயல்முறையில் அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ள பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அதேவேளை, பகிடிவதை மற்றும் வன்முறைகளற்ற சுதந்திரமானதும் அமைதியானதுமான கல்விச் சூழலொன்றை உருவாக்குவதற்கு அனைவருக்கும் ஒழுக்கநெறி சார்ந்த பொறுப்பொன்று உள்ளதை எடுத்துரைத்த பிரதமர், பகிடிவதை தொடர்பில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான சூழ்நிலைகளை எளிதாக எண்ணிப் புறக்கணிக்கக் கூடாது என்றும், பகிடிவதை சார்ந்த பிரச்சினைகளின்போது மாணவர்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி, அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காகப் பல்கலைக்கழகங்களும் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனெவிரத்ன உள்ளிட்டோரும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

49 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

88 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

78 0 0
இலங்கை செய்திகள்

வட்டு மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா!

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவும் விழாவானது செப்டம்பர் 11, 12, மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது. அந்தவகையில் இன்று முதலாவது நாள் நிகழ்வாக பரிசளிப்பு…

85 0 0