வட்டு மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா!
வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவும் விழாவானது செப்டம்பர் 11, 12, மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது.
அந்தவகையில் இன்று முதலாவது நாள் நிகழ்வாக பரிசளிப்பு விழா பிற்பகல் 2.00 மணிக்கு கல்லூரியின் உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.
மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, இறை வணக்கம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து தலைமையுரை, கலை கலாச்சார நிகழ்வுகள், விருந்தினர்கள் உரை, பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன. இதன்போது நிறுவனர் நினைவுப்பேருரையை ஸ்தாபகரின் பூட்டனும், UK சட்ட உதவியாளருமான இ. சாய்பிரசாத் ஆற்றினார்.
கல்லூரியின் அதிபர் திருமதி வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர் வடமாகாக ஆளுநர் நா.வேதநாயகனும், சிறப்பு விருந்தினர் வலிகாமம் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜமுனா ராஜசீலனும் கலந்துகொண்டனர்.
மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கல்லூரிச் சமூகம் அழைத்துள்ளது.








