உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

பிரதம நீதியரசருக்கு எதிரான அரசின் அழுத்தம் நாட்டின் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
118 பார்வைகள்

பிரதம நீதியரசரின் மகனை இலக்காகக் கொண்டு அரசிலுள்ள ‘டிஜிட்டல் பயங்கரவாதிகள்’ குற்றச்சாட்டுக்களைப் பரப்பி வருகின்றனர் என்றும், தமக்கு ஏற்றாற்போல் தீர்ப்பளிக்காவிட்டால் சிறை செல்ல நேரிடும் எனக் கூறி பிரதம நீதியரசருக்கு அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராகத் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அரசின் முக்கிய தரப்பினருக்குத் தற்போதைய பிரதம நீதியரசரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பதவியில் நீடிக்கச் செய்யும் தேவை காணப்படுகின்றது.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவராகவும், உயர்நீதிமன்றத்தின் தலைவராகவும் பதவி வகிக்கும் பிரதம நீதியரசர் நாட்டின் ஜனநாயகத்துக்கு நேரடிச் செல்வாக்குச் செலுத்தும் ஒருவராவார். எனினும், தமக்கு ஏற்ற வகைத் தீர்ப்புகளை வழங்கவும், சட்டங்களை இயற்றவும் அரசின் தனிநபர் ஒருவர் மூலமாக அவருக்குக் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.

அரசில் உள்ள டிஜிட்டல் பயங்கரவாதிகள் பிரதம நீதியரசரின் மகனை இலக்காகக் கொண்டு பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். தமக்குச் சாதகமான தீர்ப்புகள் வழங்கப்படாவிட்டால் சிறை செல்ல நேரிடும் என்ற மிரட்டல் விடுக்கப்படுவதே இப்போதைய உண்மையாகும்.

இந்த நெருக்கடியான நிலையில் இருந்து பிரதம நீதியரசரை உடனடியாகப் பாதுகாக்காவிட்டால், நீதித்துறையின் முழுக் கட்டமைப்பையும் அரசு கைப்பற்றிவிடும். இது நாட்டின் ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைவதுடன், அரசின் இந்த முறையற்ற செயற்பாட்டைத் தோற்கடிக்காவிட்டால் முழு நாடும் அழிவைச் சந்திக்கும்.

ஜனாதிபதி நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவே செயற்படுகின்றார். நீதிமன்றம் ஒரு விடயம் தொடர்பில் தீர்ப்பளிப்பதற்கு முன்பே, ஜனாதிபதி முன்கூட்டியே அரசியல் மேடைகளில் தீர்ப்புகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கின்றார்.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ், டிஜிட்டல் பயங்கரவாதம் மற்றும் 80ஆம் ஆண்டு காலப்பகுதியின் உண்மையான பயங்கரவாதக் கூறுகளைத் தன் கைவசம் வைத்துக்கொண்டு ஜனாதிபதி செயற்படுகின்றார். இத்தகைய முறையற்ற செயற்பாடுகள் முற்றிலும் கண்டிக்கத்தக்கன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு.!

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இன்று வெள்ளிக்கிழமை…

100 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலையை மீள திறக்குமாறு கோரி போராட்டம்.!

கொத்மலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் பாடசாலை விடுமுறை முடிந்தும் திறக்காத காரணத்தால் பெற்றோர்களும் மாணவர்களும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலை…

75 0 0
இலங்கை செய்திகள்

நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்; சிவ வழிபாட்டிற்கு அனுமதி.!

எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் சைவமக்கள் ஏற்பாடு செய்துள்ள வழமையான பூஜை வழிபாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கோரிய விண்ணப்பம் நீதவானால் நிராகரிக்கப்பட்டது. நெடுங்கேணி…

80 0 0
இலங்கை செய்திகள்

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த…

146 0 0