உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

சத்துருக்கொண்டான் படுகொ*லை; இராணுவ முகாம் அகழ்வாய்வு செய்யப்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
134 பார்வைகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் குறித்த பகுதியில் இருந்த இராணுவ முகாம் அகழ்வாய்வு செய்யப்படவேண்டும் என்பதுடன் சர்வதேசத்தின் கண்காணிப்பில் அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்று மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் வளமையான சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெற்றது.

இதன்போது சத்துருக்கொண்டான் படுகொலையில் உயிர்நீர்த்தவர்களுக்காக மாநகரசபை உறுப்பினர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் இந்த சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநகரசபை முதல்வரின் தலைமையுரையினை தொடர்ந்து மாநகரசபையின் கடந்த கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு சபையின் அனுமதி பெறப்பட்டது.

அதனை தொடர்ந்து மாநகரசபையில் முன்மொழிவுகள் வாசிக்கப்பட்டு சபையின் அனுமதி பெறப்பட்டதுடன் மாநகரசபையின் நிலையியல் கட்டளைக்குழுக்களின் முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு வாதப்பிரதிவாதங்களுடன் அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதன்போது பல்வேறு விவாதங்கள் நடைபெற்றதுடன் மாநகரசபையின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இன்றைய அமர்வின்போது சத்துருக்கொண்டான் படுகொலையின் பிரதான பங்கினைக்கொண்ட சத்துருக்கொண்டான் பொய்ஸ் கார்டன் படைமுகாமில் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்கவும் குறித்த படுகொலையின் பிரதான சூத்திரதாரிகளான படை பொறுப்பதிகாரி உட்பட இனங்காணப்பட்ட படையினர் மீது நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தும் விசேட பிரேரணையொன்று மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன்போது குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கிய நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் பிரேரணை கொண்டுவந்தவர் முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்ததாகவும் ஏன் அக்காலப்பகுதியில் இந்த பிரேரணை கொண்டுவரப்படவில்லையென தெரிவித்தபோது அதற்கு எதிரான பல்வேறு கருத்துகள் இதன்போது தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு.!

மன்னார் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்திற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இன்று வெள்ளிக்கிழமை…

100 0 0
இலங்கை செய்திகள்

பாடசாலையை மீள திறக்குமாறு கோரி போராட்டம்.!

கொத்மலை கல்வி வலயத்திற்கு உற்பட்ட டன்சினன் குறிஞ்சி தமிழ் வித்தியாலயம் பாடசாலை விடுமுறை முடிந்தும் திறக்காத காரணத்தால் பெற்றோர்களும் மாணவர்களும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த பாடசாலை…

75 0 0
இலங்கை செய்திகள்

நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்; சிவ வழிபாட்டிற்கு அனுமதி.!

எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் சைவமக்கள் ஏற்பாடு செய்துள்ள வழமையான பூஜை வழிபாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் கோரிய விண்ணப்பம் நீதவானால் நிராகரிக்கப்பட்டது. நெடுங்கேணி…

80 0 0
இலங்கை செய்திகள்

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த…

146 0 0