உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

ஈஸ்டர் சம்பவ விசாரணையின் முன்னேற்றம் குறித்து கத்தோலிக்க மதத் தலைவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
104 பார்வைகள்

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களிடையே சகவாழ்வு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும், எந்தவிதமான இனவாத அல்லது மத ரீதியான வெறுப்புணர்வையும் அனுமதிக்காமல் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதற்கும் அரசு முன்னெடுக்கும் திட்டம் குறித்து இந்தச் சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மக்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய அழிவுகளை தடுப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அனைத்து சமூகங்களுக்கிடையேயும் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைக் கத்தோலிக்க மதத் தலைவர்கள் பாராட்டியமையுடன், இந்த முயற்சிகளுக்கு தமது முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கத்தோலிக்கச் சமூகத்தினர் வசித்து வருகின்ற பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திச் செய்வது உட்பட அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் மற்றும் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அருட்தந்தை சிறில் காமினி, அருட்தந்தை ஜூலியன் பெற்றிக் மற்றும் அருட்தந்தைமார், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல் நினோ, மற்றும் லா நினா தாக்கங்கள் தொடர்பில் சபையில் விசேட கேள்விகளை எழுப்பிய சஜித்!

எல் நினோ, லா நினா தாக்கங்கள் தொடர்பில்சபையில் விசேட கேள்விகளை எழுப்பிய சஜித் எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளால் இலங்கையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில்…

61 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை சாரணர் இயக்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில்…

99 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை இப்போதாவது உடனடியாக நிறைவேற்றுங்கள்

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளைஇப்போதாவது உடனடியாக நிறைவேற்றுங்கள் கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய அரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்டத்தில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை இன்று ஆட்சியமைத்தவுடன்…

81 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் ஆய்வுக்காக மன்னாரைச் சுற்றித் துளையிடுவது தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் அறிக்கை

இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான பிரச்சினைகள்…

128 0 0