உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

இலங்கை சாரணர் இயக்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
97 பார்வைகள்

இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரி தொடர்பிலும், அதன் அமைப்பு முன்னெடுக்கும் பணிகளின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது, தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ சின்னம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

இலங்கை சாரணர் இயக்கத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சாரணர் இயக்கத்தை அதிகளவிலான பாடசாலைகளுக்கு விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், அரசு முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களுக்கு சாரணர் இயக்கம் வழங்கக்கூடிய பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிப் பிரதம ஆணையாளர் (பதில்) கபில பெரேரா, செயற்குழுத் தலைவர் கமல்நாத் ஜினதாச, ஜம்போரி இணை அமைப்பாளர் ஆணையாளர் பொறியியலாளர் அமில் அபேசுந்தர உள்ளிட்ட இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல் நினோ, மற்றும் லா நினா தாக்கங்கள் தொடர்பில் சபையில் விசேட கேள்விகளை எழுப்பிய சஜித்!

எல் நினோ, லா நினா தாக்கங்கள் தொடர்பில்சபையில் விசேட கேள்விகளை எழுப்பிய சஜித் எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளால் இலங்கையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில்…

57 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணையின் முன்னேற்றம் குறித்து கத்தோலிக்க மதத் தலைவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.…

101 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை இப்போதாவது உடனடியாக நிறைவேற்றுங்கள்

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளைஇப்போதாவது உடனடியாக நிறைவேற்றுங்கள் கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய அரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்டத்தில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை இன்று ஆட்சியமைத்தவுடன்…

81 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் ஆய்வுக்காக மன்னாரைச் சுற்றித் துளையிடுவது தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் அறிக்கை

இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான பிரச்சினைகள்…

127 0 0