உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

37ஆவது சரசவிய சினிமா விருது விழா.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
120 பார்வைகள்

இலங்கைச் சினிமாவில் சிகரம் தொட்ட விசேட கலை விழாவாகிய 37ஆவது சரசவிய சினிமா விருது வழங்கும் விழா, செப்டம்பர் 09-ஆம் திகதி கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ‘சரசவிய’ பத்திரிகை ஏற்பாடு செய்த இம்முறை விருது விழா, “இளைஞர் சினிமாவின் விடியல்” எனும் தலைப்பில் நடத்தப்பட்டதோடு, 2025ஆம் ஆண்டில் 13 புதிய இயக்குநர்கள் சிங்களச் சினிமாவில் தடம் பதித்தமையும் இவ்விழாவில் விசேடமாக அடையாளப்படுத்தப்பட்டது.

2025ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட சிங்களத் திரைப்படங்களைப் பாராட்டி, 34 போட்டிப் பிரிவுகளின் கீழ் 50க்கும் மேற்பட்ட விருதுகள் இங்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. இதில் ஜனரஞ்சகமான திரைப்படமாக இலங்கோ ராஜ் இயக்கிய ‘நெலும் குளுண’ (தாமரைக் கோபுரம்) திரைப்படம் விருதை வென்றதுடன், திசர இம்புலான இயக்கிய ‘மோட தரிந்து’ திரைப்படம் அதிக வசூலை ஈட்டிய திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.

இவ்விழாவில் உரையாற்றிய புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி,

1964ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சரசவிய விருது விழா கடந்து வந்த இந்தப் பயணம் குறித்து பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சினிமாவுக்காகத் தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த சான்றோர்களைப் பாராட்டிக் கௌரவிப்பது மிகவும் போற்றத்தக்கது. பேராசிரியர் திஸ்ஸ ரணசிங்க அவர்களால் வடிவமைக்கப்பட்ட சரசவிய விருதானது, இலங்கையின் திரைப்பட விருதுகளில் தலைசிறந்த விருதாகக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டிலும் நடப்பாண்டிலும் மீண்டும் சினிமா வளம்பெறும் காலப்பகுதியாக மாறியுள்ளது. மீண்டும் திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் வருகை தருவது ஒரு நல்ல அறிகுறியாகும். அதேபோன்று, இலங்கைத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்கார் விருது விழாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நம் நாட்டுத் திரைப்படம் ஒன்று தயாராக இருக்கிறது எனக் கூறினார்.

இந்நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, தொழிற்கல்வி அமைச்சர் நலின் ஹேவகே, சுகாதாரப் பிரதி அமைச்சர் ஹன்ஸக விஜேமுனி, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் காமினி வருஷமான உள்ளிட்ட லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர்கள், மூத்த மற்றும் இளைய கலைஞர்கள், திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

19 நிலக்கரி கப்பல்களில் 1,20,000 மெட்ரிக் தொன் நிலக்கரி காணாமல் போயுள்ளது.!

அரசாங்கத்தின் வாக்குறுதிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கடுமையாகச் சாடி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.…

59 0 0
இலங்கை செய்திகள்

மிக் போர் விமானக் கொள்முதல் விவகாரம்; ரொஷான் குணதிலக்கவிடம் வாக்குமூலம் பதிவு.!

மேல் மாகாண முன்னாள் ஆளுநரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதியுமான ஏயர் வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இன்று காலை நிதியியல் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID)…

69 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ நிலைமை தொடர்பாக ஊடக சந்திப்பு.!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியும் புவியல் துறை பேராசிரியருமான நாகமுத்து பிரதீபராஜா எல்நினோ நிலைமை தொடர்பாக கிளிநொச்சியில் ஊடக சந்திப்பினை இன்று 10.09.2026 மேற்கொண்டிருந்தார். குறித்த ஊடக…

98 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு மக்கள் பதில் அளிப்பார்கள்.!

தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைகளினாலும் பொய் வாக்குறுதிகளினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணையும் திருப்புமுனை நாளாக செப்டம்பர் 12 ஆம் திகதி அமையும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

140 0 0