உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

மிக் போர் விமானக் கொள்முதல் விவகாரம்; ரொஷான் குணதிலக்கவிடம் வாக்குமூலம் பதிவு.!

இலங்கை செய்திகள் 33 நிமிடங்கள் முன்
70 பார்வைகள்

மேல் மாகாண முன்னாள் ஆளுநரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதியுமான ஏயர் வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இன்று காலை நிதியியல் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜரானார்.

கொழும்பு பழைய பொலிஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள நிதியியல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று காலை வருகை தந்த அவரிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய மிக் (MiG) போர் விமானக் கொள்முதல் விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பெறப்பட்டது.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது, அதாவது 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உக்ரைன் நாட்டில் இருந்து இலங்கை விமானப்படைக்காக மிக்-27 (MiG-27) ரக போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடு செய்யப்பட்டதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

குறித்த ஒப்பந்தங்களின் போது விமானப்படைத் தளபதியாகச் செயற்பட்டவர் என்ற அடிப்படையில், இந்த நிதி முறைகேடுகள் மற்றும் கொள்முதல் நடைமுறைகள் குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

2006 முதல் 2011 வரை இலங்கை விமானப்படைத் தளபதியாகப் பணியாற்றி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றிய ரொஷான்ன் குணதிலக்க, பின்னர் முப்படைத் தலைமை அதிகாரியாகவும், மேல் மாகாண ஆளுநராகவும் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

19 நிலக்கரி கப்பல்களில் 1,20,000 மெட்ரிக் தொன் நிலக்கரி காணாமல் போயுள்ளது.!

அரசாங்கத்தின் வாக்குறுதிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கடுமையாகச் சாடி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார்.…

59 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ நிலைமை தொடர்பாக ஊடக சந்திப்பு.!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியும் புவியல் துறை பேராசிரியருமான நாகமுத்து பிரதீபராஜா எல்நினோ நிலைமை தொடர்பாக கிளிநொச்சியில் ஊடக சந்திப்பினை இன்று 10.09.2026 மேற்கொண்டிருந்தார். குறித்த ஊடக…

99 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு மக்கள் பதில் அளிப்பார்கள்.!

தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறைகளினாலும் பொய் வாக்குறுதிகளினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணையும் திருப்புமுனை நாளாக செப்டம்பர் 12 ஆம் திகதி அமையும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

140 0 0
இலங்கை செய்திகள்

37ஆவது சரசவிய சினிமா விருது விழா.!

இலங்கைச் சினிமாவில் சிகரம் தொட்ட விசேட கலை விழாவாகிய 37ஆவது சரசவிய சினிமா விருது வழங்கும் விழா, செப்டம்பர் 09-ஆம் திகதி கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கில்,…

120 0 0