உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

உக்ரைன், மால்டோவா எல்லையில் ஆளில்லாத வானூர்தித் தாக்குதல் : இருவர் பலி!

உலக செய்திகள் 4 மணி நேரம் முன்
129 பார்வைகள்

உக்ரைன் மற்றும் மால்டோவா எல்லைக் கடக்கும் பகுதியில் நடத்தப்பட்ட ரஷ்ய ஆளில்லாத வானூர்தி தாக்குதலில் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் உள்ள ஸ்டாரோகோசாச்சே (Starokozache) எல்லைச் சாவடி மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் காயமடைந்தனர் என பிராந்திய ஆளுநர் ஒலெஹ் கிப்பர் (Oleh Kiper) உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அந்தப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதோடு, எல்லைக் கடக்கும் சேவைகளும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.

எனினும், பிற்பகலுக்குள் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக யுக்ரைன் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள் உக்ரைன்-ரஷ்யா போரின் தீவிரத்தை தொடர்ந்து வெளிக்காட்டி வருவதுடன், எல்லைப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம்!

அமெரிக்காவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், 132 ஆண்டுகால வானிலைப் பதிவுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான கோடையாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

114 0 0
உலக செய்திகள்

கமரூனில் துப்பாக்கி முனையில் 5 ஆசிரியர்கள் கடத்தல்!

கமரூனின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையம் மீது ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, ஐந்து ஆசிரியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். வூம்…

118 0 0
உலக செய்திகள்

சிரியாவில் ஆயுதக் கிடங்கொன்றில் வெடிப்பு: 14 பேர் பலி!

சிரியாவின் இட்லிப் (Idlib) மாகாணத்தில் உள்ள ஆயுதக் கிடங்கொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப் மாகாணம்…

122 0 0
உலக செய்திகள்

பெரு நாட்டில் 600 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு!

பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் 600 ஆண்டுகளாக மனிதத் தொடுகைக்கு உட்படாத பழமையான கல்லறை ஒன்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சான் சான் (Chan Chan) நகருக்கு…

94 0 0