பெரு நாட்டில் 600 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு!
பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் 600 ஆண்டுகளாக மனிதத் தொடுகைக்கு உட்படாத பழமையான கல்லறை ஒன்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சான் சான் (Chan Chan) நகருக்கு அருகில் உள்ள இந்தப் புதைவிடத்தில், இன்கா நாகரிகத்திற்கு முந்தைய சிமு (Chimu) நாகரிகத்தைச் சேர்ந்த குறைந்தது 38 பேரின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கி.பி. 900 முதல் 1470 வரை பெருவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் தழைத்தோங்கிய சிமு நாகரிகக் காலத்தைச் சேர்ந்த உலோகம் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மற்றும் அரிய கலைப்பொருட்கள் இந்தக் கல்லறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் காலனித்துவக் காலத்தில் பல கல்லறைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தளம் முழுமையாகப் பாதுகாப்பாகவும் சேதமடையாமலும் இருப்பது நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பு, சிமு நாகரிகத்தின் இறுதிச் சடங்கு முறைகள் மற்றும் அவர்களின் பண்பாட்டு மரபுகள் குறித்த மேலதிக உண்மைகளைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் உதவும் என கருதப்படுகிறது.