உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

சிரியாவில் ஆயுதக் கிடங்கொன்றில் வெடிப்பு: 14 பேர் பலி!

உலக செய்திகள் 5 மணி நேரம் முன்
123 பார்வைகள்


சிரியாவின் இட்லிப் (Idlib) மாகாணத்தில் உள்ள ஆயுதக் கிடங்கொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப் மாகாணம் சர்மடா நகருக்கு அருகில் உள்ள தற்காலிக ஆயுதக் கிடங்கொன்றில் நிகழ்ந்த சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று நடந்த இந்தச் சம்பவத்தில் மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

இதில் சில பாதுகாப்புப் படை வீரர்களும் அடங்குவர் என சிரியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போர் எச்சங்கள் மற்றும் ஆயுதங்களைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்தத்தளத்தில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீப்பற்றியது.

தொடர்ந்து ஏற்பட்ட சிறிய வெடிப்புகள் காரணமாகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அவசரகாலக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும், நீண்ட காலப் போரின் எச்சங்கள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் ஆயுதங்கள் சேமிக்கப்படுவதால் இதுபோன்ற ஆபத்தான சம்பவங்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம்!

அமெரிக்காவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், 132 ஆண்டுகால வானிலைப் பதிவுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான கோடையாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

114 0 0
உலக செய்திகள்

உக்ரைன், மால்டோவா எல்லையில் ஆளில்லாத வானூர்தித் தாக்குதல் : இருவர் பலி!

உக்ரைன் மற்றும் மால்டோவா எல்லைக் கடக்கும் பகுதியில் நடத்தப்பட்ட ரஷ்ய ஆளில்லாத வானூர்தி தாக்குதலில் 02 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் உள்ள ஸ்டாரோகோசாச்சே (Starokozache)…

129 0 0
உலக செய்திகள்

கமரூனில் துப்பாக்கி முனையில் 5 ஆசிரியர்கள் கடத்தல்!

கமரூனின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையம் மீது ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, ஐந்து ஆசிரியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். வூம்…

119 0 0
உலக செய்திகள்

பெரு நாட்டில் 600 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு!

பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் 600 ஆண்டுகளாக மனிதத் தொடுகைக்கு உட்படாத பழமையான கல்லறை ஒன்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சான் சான் (Chan Chan) நகருக்கு…

95 0 0