உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
179 பார்வைகள்

இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட காலிப் பகுதியைச் சேர்ந்த அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான அதிபர், குறித்த பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக ஒரு பிள்ளைக்கு மூன்று இலட்சம் ரூபாய் வீதம் இருவருக்கும் ஆறு இலட்சம் ரூபாய் கோரியுள்ளதுடன், பின்னர் அத்தொகை மூன்று இலட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு 2026ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டிற்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மற்றைய பிள்ளையை 8ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக எஞ்சிய ஒன்றரை லட்சம் ரூபாயில் 50,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு அப்பிள்ளையையும் பாடசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர், இவ்விரு பிள்ளைகளையும் பாடசாலையில் சேர்ப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுத்தமைக்காக மேலும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பணத்தைக் கொடுக்காவிட்டால் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவதாகக் கூறி, அவ்வாறு செய்யாமல் இருப்பதற்காகக் கோரப்பட்ட இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற முயன்றபோதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாதுகாப்பற்ற குழியில் விழுந்து சிறுவன் உ*யிரிழப்பு; கைதான தொழில்நுட்ப உதவியாளருக்கு விளக்கமறியல்.!

பாலம் அமைப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பாலம்…

103 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்.!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். செப்டெம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயத்தில், ஜனாதிபதி…

116 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி கருத்து வெளியிடுவது நீதித்துறைக்கு அவமதிப்பு.!

22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே ஜனாதிபதி, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என அறிவித்திருப்பது நாட்டின் நீதித்துறை அமைப்புக்கு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய…

88 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியசாலையில் நீண்டகாலமாக போ*தைப்பொருள் வியாபாரம்; இருவர் கைது.!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு ஊழியர்கள், மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும்…

121 0 0