உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

மாணவி கிருசாந்தியின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
142 பார்வைகள்

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவியான கிருசாந்தி குமாரசாமி உள்ளிட்டோரின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை செம்மணிப் பகுதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு அங்கு புதைக்கப்பட்ட ஏனையோரும் நினைவுகூரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி, 18 வயதுடைய சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, செம்மணிப் பகுதியில் இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

கிருசாந்தி செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையைப் பிரதேச மக்கள் அவதானித்து மாணவியின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மாணவியின் தாயார் இராசம்மா குமாரசாமி, மாணவியின் சகோதரன் குமாரசாமி பிரணவன் மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்க உதவியாளர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியைத் தேடிச் சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்துள்ளனர்.

அங்கு மாணவியைத் தேடிச் சென்ற அந்த மூவரையும் இராணுவத்தினர் கழுத்து நெரித்தும் வெட்டியும் படுகொலை செய்திருந்தனர்.

அன்றைய தினம் நள்ளிரவு கிருசாந்தி உட்பட படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணிப் பகுதியில் உள்ள வயல்வெளியில் இராணுவத்தினர் இரகசியமாகப் புதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாதுகாப்பற்ற குழியில் விழுந்து சிறுவன் உ*யிரிழப்பு; கைதான தொழில்நுட்ப உதவியாளருக்கு விளக்கமறியல்.!

பாலம் அமைப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பாலம்…

103 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்.!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்துள்ளார். செப்டெம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயத்தில், ஜனாதிபதி…

116 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே ஜனாதிபதி கருத்து வெளியிடுவது நீதித்துறைக்கு அவமதிப்பு.!

22வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் தனது கருத்தை வெளியிடுவதற்கு முன்னரே ஜனாதிபதி, மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படாது என அறிவித்திருப்பது நாட்டின் நீதித்துறை அமைப்புக்கு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய…

88 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியசாலையில் நீண்டகாலமாக போ*தைப்பொருள் வியாபாரம்; இருவர் கைது.!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு ஊழியர்கள், மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும்…

121 0 0