போ*தை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது.!
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 1700 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றவிசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.