உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமைக்கு எதிராக FR மனுத் தாக்கல்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
115 பார்வைகள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் துலார குணதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி துலார குணதிலக்க என்ற மனுதாரரால் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அந்த மனு விசாரணைக்காகத் திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவே இல்லை என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன், இந்த மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தைச் சபாநாயகருக்கு அறிவிப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31…

2 0 0
இலங்கை செய்திகள்

யால தேசிய பூங்கா தற்காலிகமாக மூடல்!

எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2-வது மண்டலங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலவும் அதிக வெப்பநிலையால் விலங்குகள் மற்றும்…

60 0 0
இலங்கை செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீளாய்வுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 7 முதல் 21 வரை இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள்…

83 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் திருக்கோவில் கல்வி வலயத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவி கௌரவிப்பு

கடந்த வாரம் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலய மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவி ரவிகரன் விஸ்வாதியா பாராட்டி…

136 0 0