உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

வாகனம் மோதி பெண் குழந்தை உ*யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
55 பார்வைகள்

கிளிநொச்சி, உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்தைத் தாத்தா இயக்கியபோது, வாகனத்தின் அருகே ஓடிச் சென்ற பெண் குழந்தை சக்கரத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முற்பகல் 11 மணியளவில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்தின் சாரதியான குழந்தையின் தாத்தா அதனை இயக்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் அருகே ஓடிச் சென்ற குழந்தை அதன் சக்கரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றப் பதில் நீதிவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் மரண விசாரணை மற்றும் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செவ்வாயன்று கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார்…

0 0 0
இலங்கை செய்திகள்

கற்பிட்டியில் கரை ஒதுங்கிய இந்திய மீனவரின் படகு.!

இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான படகு ஒன்று புத்தளம், கற்பிட்டிப் பிரதேசத்தில் நேற்றுக் கரை ஒதுங்கியுள்ளது. இந்திய மீனவர்களின் பயன்பாட்டில் உள்ள படகு ஒன்றே இயந்திரமின்றி இவ்வாறு கரை…

59 0 0
இலங்கை செய்திகள்

டெங்குவை விட சாலை விபத்துகளினால் ஏற்படும் உ*யிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிப்பு.!

டெங்கு நோயைக் காட்டிலும் சாலை விபத்துகளினால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், விசேட…

82 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னார் கடல் பகுதியில் இந்திய விசைப்படகுகள் அட்டகாசம்.!

இலங்கையின் தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையிலிருந்து சுமார் 9 கிலோமீற்றர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடிப்பதாக உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.…

50 0 0