தலைமன்னார் கடல் பகுதியில் இந்திய விசைப்படகுகள் அட்டகாசம்.!
இலங்கையின் தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையிலிருந்து சுமார் 9 கிலோமீற்றர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடிப்பதாக உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இதனால் இலங்கை மீனவர்களுக்கு சுமார் ரூ. 600,000 பெறுமதியான வலைகள் சேதப்படுத்தப்பட்டு அல்லது திருடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுக்கவும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
