கொழும்பில் நீர் விநியோகத் தடை இரவு 11.30 மணி வரை நீடிப்பு
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகத் தடை இன்று (04) இரவு 11.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட அத்தியாவசிய பராமரிப்பு பணிகளைத் தொடர்ந்து, நீர் கடத்தும் பிரதான குழாயில் ஏற்பட்ட கசிவை சீரமைக்கும் பணிகள் தொடர்வதற்காக நீர் விநியோகத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இன்று இரவு 8.00 மணியுடன் நீர் விநியோகத் தடை நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் காரணமாக மேலும் மூன்றரை மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து நீர் விநியோகத் தடையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.