உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

மாமுனை தம்பகாமம் அபாய வெளியேற்ற பாதையை பார்வையிட்ட ரஜீவன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
34 பார்வைகள்

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாமுனையிலிருந்து தம்பகாமம் ஊடக பளைக்கு செல்கின்ற வீதியானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாது காணப்படுவதால் சுனாமி போன்ற அவசர நிலைமைகளில் வெளியேறுவதற்கு பல்வேறு நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதாலும், மாமுனையிலிருந்து பளைக்கு செல்வதற்கு 7 km தூரமாக உள்ள நிலையில் மாற்றுப் பாதையை பயன்படுத்தி மருதங்கேணி, புதுக்காடு ஊடக பளைக்கு செல்வதற்கு 22 km தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது.

இந் நிலையில் நேற்று இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த வீதியை திருத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் குறித்த வீதியை நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி குறித்த வீதியை நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன்பின் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி,
குறித்த வீதி மிக விரைவில் சீரமைத்து தரப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினருடன் வடமராட்சி தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சாம், மாமுனை கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் சென்றிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர், ஆணையாளர் ஆகியோர் இலங்கை விஜயம்.!

அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்திலுள்ள சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற விடயங்களில் அமெரிக்க –…

49 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

பாரவூர்தி ஒன்று உந்துருளி மீது மோதியதில் கணவன் மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று கிளிநொச்சியில் A9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.…

60 0 0
இலங்கை செய்திகள்

வலி. வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை நீக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் வழங்க வேண்டும்.!

மகிந்த அரசாங்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி. வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநுர தலைமையிலான அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க…

78 0 0
இலங்கை செய்திகள்

பொறுப்புக்கூறலை மேலும் பலப்படுத்துக; இலங்கை அரசிடம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் கோரிக்கை.!

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் ஆற்றுப்படுத்தலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் செயற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் புதிதாக வெளியிடப்பட்ட ஐ.நா.…

29 0 0