சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!
பாரவூர்தி ஒன்று உந்துருளி மீது மோதியதில் கணவன் மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று கிளிநொச்சியில் A9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரவூர்தி கிளிநொச்சி நோக்கி பயணித்த உந்துருளியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கணவன் மனைவி இருவரும் ஆலயத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.