உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

மலையகத்துக்கான புகையிரத பாதைகள் செப்பனிடும் பணிகள் தீவிரம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
61 பார்வைகள்

மலையகத்துக்கான புகையிரத பாதைகள் செப்பனிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கம்பளை நாவலப்பிட்டியவிற்கான புகையிரத பாதை செப்பனிடும் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளது. அதே போல் ஹட்டனில் இருந்து கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டன், நானுஓயா வரையிலான புகையிரத பாதைகள் வெகு விரைவாக செப்பனிடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா புயலின் பின்னர் மலையக பகுதியில் பாரிய அளவில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததால் தலைநகர் கொழும்பில் இருந்து பதுளை வரையிலான புகையிரத சேவைகள் தடைபட்டு இருந்தது.

தற்போது பதுளையில் இருந்து நானுஓயா வரையிலான புகையிரத சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

எதிர்வரும் மாதங்களில் பதுளையில் இருந்து கண்டி வரையிலான புகையிரத சேவைகள் இடம்பெறும் என நானுஓயா புகையிரத சேவைகள் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த பத்து மாதங்களாக மலையக பகுதியில் புகையிரத சேவைகள் தடைபட்டதால் புகையிரதம் ஊடாக பயணிக்கும் பயணிகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பாரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.

மலையக பகுதியில் உள்ள ஒரு சில புகையிரத நிலையங்கள் தவிர அதிக அளவில் உள்ள புகையிரத நிலையங்களில் உள்ள மேடைகளை உயர்த்த வேண்டும்.

சுமார் இரண்டு அடி உயரம் அதிகமாக உள்ளதால் புகையிரத பெட்டிகளில் பயணிகள் ஏறும் போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டன் அதற்கு அப்பால் உள்ள அனைத்து புகையிரத நிலையத்தில் உள்ள அனைத்து மேடைகளையும் உயர்த்த வேண்டும் என பாதிப்புக்கு உள்ளாகி வரும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர், ஆணையாளர் ஆகியோர் இலங்கை விஜயம்.!

அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்திலுள்ள சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற விடயங்களில் அமெரிக்க –…

49 0 0
இலங்கை செய்திகள்

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

பாரவூர்தி ஒன்று உந்துருளி மீது மோதியதில் கணவன் மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று கிளிநொச்சியில் A9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.…

60 0 0
இலங்கை செய்திகள்

வலி. வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை நீக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் வழங்க வேண்டும்.!

மகிந்த அரசாங்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி. வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநுர தலைமையிலான அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க…

78 0 0
இலங்கை செய்திகள்

பொறுப்புக்கூறலை மேலும் பலப்படுத்துக; இலங்கை அரசிடம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் கோரிக்கை.!

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் ஆற்றுப்படுத்தலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் செயற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் புதிதாக வெளியிடப்பட்ட ஐ.நா.…

29 0 0