விஜய் வெற்றியால் மாறுகிறதா ஜெயிலர் 2 படத்தின் கதை
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க (ரீ-ஷூட்) படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, நடிகர் விஜய்யை மையப்படுத்தி இடம்பெற்றதாகக் கூறப்படும் சில காரசாரமான வசனங்களில் மாற்றங்களை மேற்கொள்ள ரஜினிகாந்த் மற்றும் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆலோசித்து வருவதாக கொலிவுட் தரப்புக்களில் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொடர்பான அரசியல் பின்னணியில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வசனங்கள், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு மாற்றப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இது தொடர்பில் படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.