அஜித் படத்தில் ஷாலினி நடிக்கிறாரா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்திரைப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், விரைவில் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், புதிய திரைப்படத்தில் ஷாலினியை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முயற்சி செய்ததாகவும், எனினும் ஷாலினி நடிக்க விருப்பமில்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்குமாரை திருமணம் செய்த பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை ஷாலினி நிறுத்திக்கொண்டார். 2001ஆம் ஆண்டு வெளியான ‘பிரியாத வரம் வேண்டும்’ திரைப்படமே அவர் இறுதியாக நடித்த படமாகும். இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார்.