உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

கல்முனை சந்தாங்கேணியில் நீச்சல் தடாகம் திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 58 நிமிடங்கள் முன்
66 பார்வைகள்

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் 104 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வும், புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வும் நேற்று (30) மிக விமர்சையாக இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் விசேட அழைப்பின் பேரில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்ததுடன் நீச்சல் தடாகத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் பல இடங்களுக்கும் களவிஜயங்களை மேற்கொண்டனர்.

இதன்போது, சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தின் எதிர்கால அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும், காரைதீவு சண்முகா வித்தியாலய மைதானக் காணிப் பிரச்சினை குறித்தும் கேட்டறிந்தனர்.

மேலும் அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானங்கள், அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகம் ஆகியவற்றுக்கும் நேரில் சென்ற அமைச்சர், அங்குள்ள குறைபாடுகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.

கல்முனையில் இடம்பெற்ற இந்த விழாவில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் என்.எம். நௌபீஸ், அம்பாறை மாவட்ட பொறியியலாளர் சாஹீர், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் தலைவர் எம்.ஐ. அப்துல் அஸீஸ், மாநகர சபை அதிகாரிகள், விளையாட்டுத் துறை பிரதிநிதிகள் மற்றும் பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

96 0 0
அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

92 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

135 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

106 0 0