உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
46 பார்வைகள்

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி வரும் எங்களுடைய தாய்மார்கள் முன்னெடுக்கும் குறித்த செயல்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என சிவில் சமூக செயற்பாட்டாளரும், மனித உரிமைகள் ஆர்வலருமான யே.யாட்சன் பிகிறாடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்று (25) செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30 யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” என்ற நிகழ்வை, எங்களுடைய காணாமலாக்கப்பட்ட நீண்ட காலமாக போராடி வரும் எங்களுடைய தாய்மார்கள் இந்த செயற்பாட்டினை யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா மண்டபத்தில் அவர்கள் முன்னெடுக்கிறார்கள். அவர்களுக்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் ஆதரவுகள் வலித்துக் கொண்டு வருகின்றன.

சிவில் சமூகமாக இருக்கலாம், சமூக ஆர்வலர்களாக இருக்கலாம் மற்றும் சர்வதேச அமைப்புகளாக இருக்கலாம், இன்னும் பல்வேறு அமைப்புகள் அவர்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில், சிவில் சமூகமாக நாங்களும் அவர்களுக்கான ஆதரவினை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம்.

அவர்களுடைய இந்த செயற்பாட்டை, அவர்களுடைய கருத்தை வலுப்படுத்தும் நோக்கோடு, அவர்களுக்கு ஆதரவை தொடர்ந்து அனைவரும் வழங்க வேண்டும் என்பதை நாங்களும் வலியுறுத்துகின்றோம்.

ஏனென்றால், இது ஒரு நீதிக்கான பயணம். இன்று வரைக்கும் தங்களுடைய பிள்ளைகளைத் தேடிய தாய்மாரும், பிள்ளைகள் தங்களுடைய தாய்மார்களைத் தேடியதாகவும், உறவுகள் சகோதரர்களைத் தேடியதாகவும் இந்த நிகழ்வு எங்களுடைய நாட்டில் வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவுற்று இன்று வரை நீதி கிடைக்காத ஒரு பயணமாக அவர்கள் இன்று வரைக்கும் வீதி வீதியாக முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய பயணம் நீதி கிடைக்கப்பட வேண்டும், உண்மை நிலை நாட்டப்பட வேண்டும். சர்வதேச ரீதியான தலையீடுகளுடன் அவர்களுடைய நீதியை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக, அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் இந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த தினத்திற்கு எங்களுடைய ஆதரவை நாங்கள் பலமாகத் தெரியப்படுத்துகிறோம்.

ஏனென்றால், நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த நீதி பயணத்தை முன்னெடுப்பதற்கு இணைந்து கொள்வது ஒவ்வொருவருடைய மனிதப் பொறுப்பாகும்.

நாங்கள் மனித உரிமைகளை மதித்தவர்களாக, சிவில் சமூகங்களாக, மனித உரிமை ஆர்வலர்களாக மற்றும் சமூகத்தைச் சேர்ந்த உங்களுடைய பணிகளை முன்னெடுக்கின்ற பல்வேறு நபர்களும் அவர்களுக்கு இந்த ஆதரவு வழங்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் வினயமாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

Photo – ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல்மேலும் 90 நாள்களுக்கு நீடிப்பு! 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

பு.கஜிந்தன் திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

49 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

60 0 0