சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் செப்டம்பரில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய வாய்ப்பு
அடுத்த மாதம் செப்டம்பர் 12 – 13 ஆம் திகதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், தனது பிரதிநிதிகள் குழுவுடன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது உறுதியானால், 7 ஆண்டுகளுக்குப் பின்னர். அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமையும்.
முன்னதாக, 2019-இல் 200 அதிகாரிகளுடன் வருகை தந்த ஷி ஜின்பிங், இந்த முறை சுமார் 400 அதிகாரிகள் அடங்கிய பெரிய குழுவுடன் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020 எல்லை மோதலுக்குப் பிறகு நிலவும் சீரற்ற உறவை சீர்செய்யவும், இரண்டு நாடுகளுக்கிடையேயான தகராறுகளைக் கட்டுப்படுத்தி ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்த உச்சிமாநாடு பயன்படும் என்று நம்பப்படுகிறது.
கடந்த 2024 ஒக்டோபரில் எட்டப்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து, அண்மையில் ஜூலை மாத இறுதியில் எல்லையில் படைவீரர்கள் நேருக்கு நேர் சந்தித்த சம்பவங்கள் இடம்பெற்றன.
இந்த நிலையில், எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைக்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று பீஜிங் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இந்தியா நடத்தும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதியின் பயணம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளது.