உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 43 நிமிடங்கள் முன்
53 பார்வைகள்

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இந்திய பிரஜைகள் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இந்தியப் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 33 வயதான ஆண் ஒருவர் இந்தியாவில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வருபவர் எனவும், 38 வயதான பெண் இந்திய பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் சீனாவில் இருந்து குறித்த சிகரெட் தொகையை கொள்வனவு செய்து, அங்கிருந்து சிங்கப்பூர் சென்று பின்னர் சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான SQ-468 விமானத்தில் இன்று அதிகாலை 12.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் கொண்டு வந்திருந்த மூன்று பயணப் பொதிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பொதிகளில் மொத்தம் 278 சிகரெட் கார்ட்டூன்களில் 55,600 சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (25) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்தமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

40 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

67 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

54 0 0