உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஹைட்டியில் வன்முறை : குறைந்து 30 பேர் உயிரிழப்பு!!

உலக செய்திகள் 49 நிமிடங்கள் முன்
52 பார்வைகள்

ஹைட்டியில் தலை நகர் போர்ட்-ஓ-பிரின்ஸ்க்கு தெற்கே அமைந்துள்ள கென்ஸ்காஃப் எனும் விவசாய சமூகப் பகுதியில் வன்முறை குழு நடத்திய கொடூரத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த தாக்குதலின்போது, ஆயுதமேந்திய குழுவினர் வீடுகள் மற்றும் தேவாலயங்களை கொளுத்தியும், பொதுமக்களை சுட்டும் வன்முறைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தால் “வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு” என அறிவிக்கப்பட்ட ‘விவ் அன்சம்’ என்ற வன்முறை குழுவின் கூட்டமைப்பே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தலைநகரின் 70 வீதப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்தக்குழு, தூதரகங்கள் மற்றும் அரசுக் கட்டிடங்கள் அமைந்துள்ள பெஷியன் வில் பகுதிக்கான பாதையைக் கொண்ட கென்ஸ்காஃப் பகுதியைக் கைப்பற்ற தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற காவல் படை வன்முறையைக் கட்டுப்படுத்த முயற்சித்து வரும் நிலையிலும், நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் 3,100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தநிலையில், ஹைட்டி நாட்டின் பிரதமர் அலுவலகம் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன், பாதுகாப்புப் படையினர் அங்கு நிலைநிறுத்தப்பட்டு அரசு அதிகாரம் நிலைநாட்டப்படும் என உறுதி அளித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்கத் தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முடக்கிவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ள விரிவுபடுத்தப்பட்ட தடைகளுக்கு எதிராகப் பதிலடி கொடுப்பதாக தெஹ்ரான் உறுதியளித்துள்ளது. அதேவேளையில், வொஷிங்டனின் அழுத்த நடவடிக்கைகளைத் தங்கள் முக்கிய…

48 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் செப்டம்பரில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய வாய்ப்பு

அடுத்த மாதம் செப்டம்பர் 12 – 13 ஆம் திகதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், தனது பிரதிநிதிகள் குழுவுடன் பங்கேற்பார்…

63 0 0
உலக செய்திகள்

கொங்கோவில் உயிர்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் : பாப்பரசர் லியோ கோரிக்கை

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக உயர்ந்துள்ள உருத்தூக்கும் நிலையில், சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட்டு உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை…

44 0 0
உலக செய்திகள்

கனடா வாகனங்கள் மீது 50 வீத வரி : ட்ரம்ப் எச்சரிக்கை!

அண்டை நாடுகளான அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க…

51 0 0