உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மன்னாரில் புற்றுநோய் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
39 பார்வைகள்

மன்னாரில் புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களைப் பராமரித்து வருபவர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்வு இன்று (14) இடம்பெற்றுள்ளது.

மன்னார் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில், மன்னார் பொது வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு வைத்தியர் சிசிலின் ஒழுங்கமைப்பில் வாழ்வுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

புற்றுநோயியல் வைத்திய நிபுணர் டொக்டர் கிருஷாந்தி தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர்களுக்கும் அவர்களைப் பராமரித்து வருபவர்களுக்கும் தேவையான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக, இலங்கையில் பெண்களை அதிகளவில் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய் தொடர்பாகவும், அதனை ஆரம்பத்திலேயே கண்டறியும் முறைகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பொதுமக்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிப்பதுடன், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

85 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

69 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

77 0 0