உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

புரவுன்லோ தோட்ட முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்; பரிபாலன சபையினர் ஊடக சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
35 பார்வைகள்

புரவுன்லோ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா 30.08.2026 இல் மிக விமர்சையாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு, ஆலய பரிபாலன சபையினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான விசேட ஊடக சந்திப்பு நேற்று 13 ஆம் திகதி ஆலய வளாகத்தில் உள்ள புரவுன்லோ தோட்ட கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

முக்கிய அம்சங்கள் & திட்டமிடல்கள்
கும்பாபிஷேகத் தயார்படுத்தல்கள், ஆலயத்தின் திருப்பணிகள் மற்றும் புனரமைப்பு வேலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் மற்றும் கிரியை நிகழ்வுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

பக்தர்களுக்கான வசதிகள், பெருவிழா நாட்களில் வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி குடிநீர், பாதுகாப்பு, வாகன நிறுத்துமிடம் மற்றும் அன்னதான வசதிகள் மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளதாக பரிபாலன சபை தலைவர் மற்றும் செயலாளர் பொருளாளர் அடங்களாக நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஊடகங்களின் பங்களிப்பு ஆன்மீகச் சிறப்புமிக்க இந்நிகழ்வை உலகெங்கும் உள்ள பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில், செய்திகளை அச்சு ஊடகம் மற்றும் நேரலை ஒளிபரப்புகளையும் துல்லியமாக மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பை பெற தீர்மானிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் ஆலய குருக்கள் சிவ ஸ்ரீ ச.கனகராஜ் குருக்கள் பரிபாலன சபையின் தலைவர் வேலுசாமி கிருஷ்ணகுமார் அசோக், செயலாளர் ராமலிங்கம் வைத்தியலிங்கம், பொருளாளர் மாரிமுத்து மகேந்திரன் முக்கிய உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட மஸ்கெலியா பிரதேச சபையின் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0