சட்டவிரோத மணல் அகழ்வில் வயல் நிலங்கள் சேதம்; விவசாயிகள் குற்றச்சாட்டு.!
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களில் இரவு பகலாக சட்டவிரோதமான முறையில் எந்தவித அனுமதியும் இன்றி உழவு இயந்திரங்களில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
குறித்த சம்பவத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
முகமாலை கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலே குறித்த சம்பவம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிசஸார் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

