உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

நடிகையிடம் அத்துமீறிய குற்றச்சாட்டின் பேரில் இயக்குநர் ஷகீல் நூரானி கைது

சினிமா 1 வாரம் முன்
108 பார்வைகள்

33 வயதான நடிகையிடம் அத்துமீறிய குற்றச்சாட்டின் பேரில், 73 வயதான பிரபல பொலிவூட் திரைப்பட இயக்குநர் ஷகீல் நூரானி கைது செய்யப்பட்டுள்ளார்.

வரவிருக்கும் புதிய திரைப்படம் குறித்து கலந்துரையாடுவதற்காக, மும்பை மால்வாணி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அந்த நடிகையை வரவழைத்த இயக்குநர் நூரானி, அவருக்குப் போதைப்பொருள் கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதுடன், மிரட்டலும் விடுத்ததாகக் காவல்துறையில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இயக்குநர், போரிவலி விடுமுறை கால நீதிமன்றத்தில் (Borivali Holiday Court) முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை ஆகஸ்ட் 12-ஆம் திகதி வரை காவல்துறை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் ஷகீல் நூரானி, ‘படே தில்வாலா’ மற்றும் ‘ஜோரு கா குலாம்’ உள்ளிட்ட பிரபல ஹிந்தித் திரைப்படங்களை எழுதியும், இயக்கியும், தயாரித்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0