மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!
ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ டி போல் (Rodrigo De Paul) மைதானத்தில் கோல் அடித்த பிறகு தனது உணர்வுபூர்வமான அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.
முன்னணி கால்பந்து தொடரில் (MLS) இன்டர் மியாமி அணிக்காக விளையாடிய ரொட்ரிகோ டி போல், போட்டியின் 31-ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து ஒரு சிறப்பான கோலை அடித்தார்.
கோல் அடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடிய அவர், தனது ஜெர்ஸியைக் கழற்றி, அதனுள் அணிந்திருந்த மெஸ்ஸியின் 10-ஆம் இலக்க ஜெர்ஸியைக் காண்பித்து மெஸ்ஸியினுடைய குடும்பத்திற்குத் தனது ஆதரவையும் அஞ்சலியையும் வெளிப்படுத்தினார்.
மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி, ரொசாரியோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
லியோனல் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் அவரது தந்தை ஜோர்ஜ் முக்கியமான பங்கு வகித்தார்.
மெஸ்ஸியின் முகவராகவும், அவரது வணிக விவகாரங்களை நிர்வகிப்பவராகவும் செயற்பட்ட அவர், மெஸ்ஸி சிறுவயதாக இருந்தபோது பார்சிலோனா கால்பந்து கழக அணியின் ‘லா மாசியா’ தொழிற்பயிற்சிக் கூடத்தில் சேர்வதற்கு முக்கியக் காரணமாகவும் அவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.