பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.!
வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (07) வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை சனிக்கிழமை (08) காலை 11.30 மணி வரை அமலில் இருக்கும்.
தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அடுத்தடுத்த எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.