அச்சுவேலி மத்திய கல்லூரியில் அனுஷ்டிக்கப்பட்ட உலக கண்டல் காடுகள் தினம்.!
எதிர்காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகத்தின் அனுசரணையுடன் அச்சுவேலி மத்திய கல்லூரி சுற்றாடல் கழகமானது இன்று உலக கண்டல் காடுகள் தினத்தினை நடத்தியிருந்தது.
இதன்போது கண்டல் காடுகள் தொடர்பான வினாவிடைப் போட்டி நடாத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பாடசாலை சுற்றாடல் முன்னோடி கழக மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் அச்சுவேலி மத்திய கல்லூரியில் பிரதி அதிபர் ராஜி துரேஸ்ராம் தலைமையில் கல்லூரி பிரதான மண் டபத்தில் மிகவும் சிறப்பு நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக விலங்கியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபா சிவகுமாரும், சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர் க.பாலினியும், கௌரவ விருந்தினராக இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்க பிரதிநிதி ம.சசிகரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டியதுடன், பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கிக் கௌரவித்தனர்.







