உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான 3 நாள் பயிற்சிப் பட்டறை நிறைவு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
57 பார்வைகள்

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சிச் செயலமர்வு கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.

நீதி அமைச்சினால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள மத்தியஸ்த உத்தியோகத்தர் கந்தசாமி அருள்பிரசாந்தனின் ஒருங்கிணைப்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

இப்பயிற்சிச் செயலமர்வின் இறுதிநாள் நிகழ்வில், பாடசாலைப் பிரதி அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அத்துடன், வளவாளர்களாக நீதி அமைச்சின் அம்பாறை மாவட்ட மத்தியஸ்த உத்தியோகத்தர் எஸ். றிஸ்மினா மற்றும் மத்தியஸ்த உத்தியோகத்தர்களான ஐ.எல்.எம். அன்பாஸ், ஏ. பாத்திமா சினோஸ், பாறுக் ஷிஹான் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கினர்.

இச்செயலமர்வின் மூலம் மாணவர்கள் மத்தியில் முரண்பாடுகளைத் தீர்க்கும் வழிகள், எதிர்கால மாணவ சமுதாயம் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், பாடசாலை மத்தியஸ்தம், மத்தியஸ்தத்தின் வரலாறு, முரண்பாடு மற்றும் அதன் தீர்வின் முக்கியத்துவம், தொடர்பாடல் திறன்கள், கலந்துரையாடல் முறைகள், மத்தியஸ்தப் படிமுறைகள் மற்றும் பாடசாலை மத்தியஸ்தத்தில் மாணவர்களின் பங்கு என்பன தொடர்பில் மாணவர்களுக்குத் தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

55 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0