உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மலையக இளைஞர்களின் முன்மாதிரியான செயல்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
90 பார்வைகள்

வட்டவளை லொனக் செல்லும் பாதையில் மீனாட்சி தோட்ட வளைவில் கடந்த டித்வா சூறாவளியில் மதகு ஒன்று பகுதியளவில் சேதமடைந்து இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக இம் மதகு முழுமையாக இடிந்துவிழும் அபாயநிலையில் காணப்பட்டது.

இச்சாலை வழியாக நான்கு தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அன்றாட தொழில் நிமித்தம் கடமையில் ஈடுபடுபவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிய நிலையில் இவ்விடயம் தொடர்பாக மலையக அரசியல்வாதிகளின் கவனத்திற்கு இத்தோட்ட மக்கள் மகஜர் மூலமாக கொண்டு சேர்த்த போதும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை

எனினும் லொனக் தோட்ட பாற்பண்ணை நிறுவனத்தின் உதவியை நாடிய நிலையில் இவ்விடயம் சம்பந்தமாக விரைந்து செயல்பட்ட இந்நிறுவனத்தின் உயரதிகாரி கௌரவ பேகஸ் அவர்கள் இம்மதக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் வாகன உதவி(டோஸர்)ஆகிய பல்வேறு உதவிகளை உடனடியாக வழங்க முன்வந்தது பெரும் பாராட்டுக்குரிய விடயமாகும்.

இதன் மூலம் இப்பிரதேச சாரதி சண்முகதாஸ் உள்ளிட்ட குழுவினர் கொட்டும் மழையிலும் விரைந்து செயல்பட்டு இச்சாலையை தற்காலிக பாவனைக்கு உகந்ததாக சீர்செய்து அனைவரினதும் கவனத்தை ஈர்த்ததுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

இம்மனிதநேய பணியை பாராட்டி இப்பிரதேச மக்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0