மலையக இளைஞர்களின் முன்மாதிரியான செயல்.!
வட்டவளை லொனக் செல்லும் பாதையில் மீனாட்சி தோட்ட வளைவில் கடந்த டித்வா சூறாவளியில் மதகு ஒன்று பகுதியளவில் சேதமடைந்து இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக இம் மதகு முழுமையாக இடிந்துவிழும் அபாயநிலையில் காணப்பட்டது.
இச்சாலை வழியாக நான்கு தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அன்றாட தொழில் நிமித்தம் கடமையில் ஈடுபடுபவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிய நிலையில் இவ்விடயம் தொடர்பாக மலையக அரசியல்வாதிகளின் கவனத்திற்கு இத்தோட்ட மக்கள் மகஜர் மூலமாக கொண்டு சேர்த்த போதும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை
எனினும் லொனக் தோட்ட பாற்பண்ணை நிறுவனத்தின் உதவியை நாடிய நிலையில் இவ்விடயம் சம்பந்தமாக விரைந்து செயல்பட்ட இந்நிறுவனத்தின் உயரதிகாரி கௌரவ பேகஸ் அவர்கள் இம்மதக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் வாகன உதவி(டோஸர்)ஆகிய பல்வேறு உதவிகளை உடனடியாக வழங்க முன்வந்தது பெரும் பாராட்டுக்குரிய விடயமாகும்.
இதன் மூலம் இப்பிரதேச சாரதி சண்முகதாஸ் உள்ளிட்ட குழுவினர் கொட்டும் மழையிலும் விரைந்து செயல்பட்டு இச்சாலையை தற்காலிக பாவனைக்கு உகந்ததாக சீர்செய்து அனைவரினதும் கவனத்தை ஈர்த்ததுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.
இம்மனிதநேய பணியை பாராட்டி இப்பிரதேச மக்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



