பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி மீண்டும் பூட்டு.!
இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக திறக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் மூடப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள் செல்லும் வீதி மக்களின் காணியூடாக தற்காலிக பாதையூடாகவே செல்லும் வகையில் திறக்கப்பட்டதுடன் நிரந்தர பாதை மூடப்பட்டே இருந்தது. எனினும் சில நாட்களில் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் காணியை சுற்றி வேலியை அமைத்ததால் மக்கள் ஆலயத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் இராணுவத்தினரிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடமும் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து இராணுவத்தினருடன் கலந்துரையாடியதையடுத்து நிரந்தர பாதை தற்காலிகமாக திறக்கப்பட்டது.
இதையடுத்து ஆலயத்துக்கு வருபவர்கள் அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்ட பின் வீதியால் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை திருவிழா முடிந்த நிலையில் நிரந்தர பாதை மூடப்பட்டுள்ளது.