ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் பேரீச்சம்பழ அறுவடை
அம்பாறை மாவட்டம் ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் நாட்டப்பட்டுள்ள பேரீச்சம்பழ மரங்களிலிருந்து முதன்முறையாகப் பேரீச்சம் பழங்கள் அறுவடை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு (31) சிறப்பாக நடைபெற்றது.
பள்ளிவாசல் வளாகத்தில் காய்த்துப் பழுத்துள்ள இந்த பேரீச்சம்பழங்கள் ஊர் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 பெப்ரவரி 4 ஆம் திகதி, நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒலுவில் BSD (2002 – O/L) அமைப்பின் ஏற்பாட்டில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஆலோசனைக்கு அமைய சுமார் 10 பேரீச்சம்பழ மரங்கள் நடப்பட்டன.
அதில் ஒரு மரத்தில் காய்த்துப் பழுத்த பேரீச்சம் பழங்களே வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுள்ளன.