நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்
மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கரை கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரியின் ஒத்துழைப்புடன் நாய்களுக்கான நீர்வெறுப்பு நோய் தடுப்பூசி ஏற்றல் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் நாய் களுக்கு இலவச கருத்தடை சிகிச்சை மற்றும் நாய்களுக்கான நீர்வெறுப்பு நோய் தடுப்பூசி ஏற்றல் எதிர்வரும்
28 ஆம் திகதி இசைமாலை தாழ்வு 01 ஆம் திகதி செம்மண் தீவு, 03ஆம் திகதி நானாட்டான், 04ஆம் திகதி வங்காலை ஆகிய பிரதேசங்களில் நானாட்டான் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படவுள்ளது.


