தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு.!
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று காலை 7.30 மணிக்கு சாண்டேஸ் மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு. தி.வரதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவத் தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சின்னங்கள் சூட்டப்பட்டு, அவர்களின் தலைமைத்துவப் பொறுப்புகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.
மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்பு, பொறுப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக சாந்தினிதேவி கிருபாகரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கு வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
புதிய மாணவத் தலைவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி, பாடசாலையின் ஒழுக்கத்தையும் நற்பெயரையும் உயர்த்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.




