உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய திருவிழாவை முன்னிட்டு சிரமதான பணிகள்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
111 பார்வைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகி, 12 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையினால் மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த மஹோற்சவ காலத்தை ஒட்டி, ஆலயத்திற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான அடியார்களின் நலன் கருதியும், அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் முகமாகவும் மட்டக்களப்பு மாநகர சபை பல்வேறு விசேட ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் கீழ் இன்றைய தினம் மாநகரசபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த சிரமதான பணியில் மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, சுவாமி எழுந்தருளி தீர்த்தமாடுவதற்காக தீர்த்தக்குளத்திற்குச் செல்லும் வீதி மிகவும் குறுகியதாகக் காணப்பட்டமையால், அதனை அகலமாக்கிப் புனரமைக்கும் பணிகள் மாநகர சபையினால் பொறுப்பேற்கப்பட்டு, தற்போது அதன் இறுதிக்கட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்ற அதேநேரம் இன்று காலை மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது நாட்டில் பரவி வரும் டெங்கு நோயின் தீவிரம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டு, ஆலய வளாகத்தில் அடியார்களுக்கு டெங்குத் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு அமைய, இந்த ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் முதற்கட்டமாக மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றுதல், நீர் தேங்கி டெங்கு வீரியமடையக்கூடிய குழிகள் மற்றும் கிடங்குகளை மூடிப் பராமரித்தல் போன்ற துப்புரவுப் பணிகள் மாநகர சபையின் அனைத்து உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் தற்பொழுது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இது தவிர, மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 20 வட்டாரங்களிலும் நிலவும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் வாராந்தம் வட்டாரங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0