உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
24 வெள்ளி

அநுருத்த பண்டாரவை கைது செய்தமை அடிப்படை உரிமை மீறல்! – தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
33 பார்வைகள்

2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில், சமூகச் செயற்பாட்டாளர் அநுருத்த பண்டாரவைச் சட்டவிரோதமாகக் கைது செய்து தடுத்து வைத்தமையின் ஊடாக அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டங்களின்போது, தன்னைச் சட்டவிரோதமாகக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தமைக்கு எதிராக அநுருத்த பண்டார உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அநுருத்த பண்டாரவைக் கைது செய்து தடுத்து வைத்திருந்த செயற்பாடானது அரசமைப்பின் மூலம் அவருக்கு உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், இந்தச் சட்டவிரோதக் கைது மற்றும் தடுப்புக் காவல் நடவடிக்கைகளுக்கு அப்போதைய மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் அப்போதைய பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோரின் நடவடிக்கைகளே நேரடிக் காரணம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

டெங்கு சோதனையின் போது வீடொன்றில் இருந்து துப்பாக்கி கண்டுபிடிப்பு!

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின்…

72 0 0
இலங்கை செய்திகள்

நாட்டில் 9 மாவட்டங்களுக்கு அதிகூடிய வெப்ப எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.…

86 0 0
இலங்கை செய்திகள்

எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு!

நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்…

78 0 0
இலங்கை செய்திகள்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (23.07.2026) வியாழக்கிழமை உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் வடக்கு…

26 0 0