உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
24 வெள்ளி

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
25 பார்வைகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை(22) மாலை கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை(22) காலை மீன்பிடிக்க இழுவைப் படகு ஒன்றில் 9 மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் நேற்று புதன்கிழமை (22) மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களை விசாரணைகளின் பின்னர் இன்று வியாழக்கிழமை(23) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை இன்றைய தினம் வியாழக்கிழமை (23) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

மீண்டும் சூடுபிடித்த இந்திய இளைஞர் போராட்டம்!

இந்தியக் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி புது டெல்லியில் நடைபெற்ற இளைஞர் போராட்டத்தின்போது, காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. நேற்று (22) பிற்பகல்…

31 0 0
இந்திய செய்திகள்

ராகுல் காந்தி கைதுக்கு தமிழக முதல்வர் விஜய் கண்டனம்!

புது டெல்லியில் இடம்பெற்ற நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட…

22 0 0
இந்திய செய்திகள்

நீட் சர்ச்சை வெடித்த நிலையில் பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு!

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இளைஞர்களின் எதிர்காலத்தின் முக்கியத்துவத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…

25 0 0
இந்திய செய்திகள்

தமிழக முதல்வர் விஜய்க்கு நீதிமன்றம் புதிய அறிவித்தல்!

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்குப் புதிய அறிவித்தலை அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

81 0 0