உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
24 வெள்ளி

அமெரிக்காவுக்கும் சவூதிக்கும் இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தம்!

உலக செய்திகள் 14 மணி நேரம் முன்
19 பார்வைகள்

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுடன் தனது சிவில் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் துல்லியமான விபரங்கள் இதுவரை பகிரப்படவில்லை என்பதுடன், இது இன்னமும் அமெரிக்க காங்கிரஸின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இது பல தசாப்த காலம் நீடிக்கக்கூடிய, பில்லியன் கணக்கிலான டொலர்கள் மதிப்பிலான கூட்டுப் பங்கான்மையாகும்.

இதில் சவூதியின் அணுசக்தித் திட்டத்துடன் அமெரிக்க நிறுவனங்களும் நிபுணர்களும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

அத்துடன் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கூட்டு ஆய்வுக்குப் பிறகு, இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை நம்பியிருப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவினால் கட்டப்படும் செறிவூட்டல் நிலையத்தில் சவூதி அரேபியா தனது சொந்த மண்ணிலேயே யுரேனியத்தைச் செறிவூட்டி எரிபொருளை உற்பத்தி செய்ய அனுமதிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியா தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கக்கூடும் என சிலர் கவலை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA!

பாரசீக வளைகுடாவில் உள்ள சிஐஏ (CIA) தளங்கள் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களின் போது, இலக்கு குறித்த தகவல்களையோ அல்லது மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தையோ வழங்கி…

31 0 0
உலக செய்திகள்

ஈரானின் உட்கட்டமைப்புக்கள் தாக்கி அழிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பதில் வழங்கும் நோக்கில், ஈரானின் ஒரு பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்கா…

25 0 0
உலக செய்திகள்

செங்கடலில் பயணித்த சவூதியின் இரு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்!

செங்கடலில் பகுதியில் பயணித்த 2 சவூதி எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.…

48 0 0
உலக செய்திகள்

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே உள்ளோம் – அமெரிக்கா அறிவிப்பு!

ஈரான் நெருக்கடிக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா இன்னும் தயாராகவே உள்ளது என்றும், ஆனால் தெஹ்ரான் தரப்பு பேச்சுவார்த்தைகளில் தீவிரத்தன்மை காட்டவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை…

66 0 0