உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

அமெரிக்காவுக்கும் சவூதிக்கும் இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தம்!

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
74 பார்வைகள்

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுடன் தனது சிவில் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் துல்லியமான விபரங்கள் இதுவரை பகிரப்படவில்லை என்பதுடன், இது இன்னமும் அமெரிக்க காங்கிரஸின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.

இது பல தசாப்த காலம் நீடிக்கக்கூடிய, பில்லியன் கணக்கிலான டொலர்கள் மதிப்பிலான கூட்டுப் பங்கான்மையாகும்.

இதில் சவூதியின் அணுசக்தித் திட்டத்துடன் அமெரிக்க நிறுவனங்களும் நிபுணர்களும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

அத்துடன் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கூட்டு ஆய்வுக்குப் பிறகு, இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை நம்பியிருப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவினால் கட்டப்படும் செறிவூட்டல் நிலையத்தில் சவூதி அரேபியா தனது சொந்த மண்ணிலேயே யுரேனியத்தைச் செறிவூட்டி எரிபொருளை உற்பத்தி செய்ய அனுமதிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் சவூதி அரேபியா தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கக்கூடும் என சிலர் கவலை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாகவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து நிலை காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 105 அமெரிக்க…

117 0 0
உலக செய்திகள்

சிரேஷ்ட அமெரிக்கர்களுக்கு 5 ஆயிரம் டொலர் : ட்ரம்ப் அறிவிப்பு!

டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 5000 டொலர் சலுகை வாக்குறுதியானது அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றால் அமெரிக்காவில் அனைத்து…

66 0 0
உலக செய்திகள்

ஏமனின் துறைமுக நகரத்தைக் கைப்பற்றிய ஹவூதி கிளர்ச்சியாளர்கள்!

ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் துறைமுக நகரமான மோகாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், செங்கடல் கடலோரப் பகுதி வழியாக முக்கிய மூலோபாயத் தீவுகளை நோக்கி…

114 0 0
உலக செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நாளை (12) மற்றும் நாளை மறுதினங்களில் (13) டெல்லியில்…

103 0 0