உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

புகழ்பெற்ற நடன ஆசிரியரான கலாபூஷணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்கு.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
21 பார்வைகள்

இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியரான கலாபூஷணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் நேற்று நடைபெற்றபோது அவரின் மாணவிகள் அவருக்கு நடாத்திய இறுதி மரியாதையான நாட்டியாஞ்சலி அனைவரது கண்களையும் குளமாக்கியுள்ளது.

மட்டக்களப்பில் பரதகலாலயா எனும் நாட்டியபள்ளியை நடாத்திவரும் ஓய்வுபெற்ற ஆசிரியையான கலாபூஷணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரன் இலங்கை உட்பட சர்வதேசத்தின் பல பகுதிகளிலும் பரதகலாலயா நாட்டிய பள்ளியை நிறுவி பெருமளவு நாட்டிய மாணவர்களை உருவாக்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவு நாட்டிய மாணவிகளையும் ஆசிரியர்களையும் உருவாக்கிய கலாபூசணம் சுபித்ரா கிருபாகரன் நேற்று முன்தினம் சுகயீனம் காரணமாக காலமானார்.

நேற்று மாலை அவரது இறுதி நல்லடக்கம் நடைபெற்ற நிலையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வின்போது அவரது மாணவிகள் கண்ணீருடன் வழங்கிய நாட்டிய சமர்ப்பணம் அனைவரது கண்களிலும் நீர்வரும் நிலையினை ஏற்படுத்தியிருந்தது.

இறுதிச்சடங்கில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது!

சீனப் பிரஜை ஒருவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபா பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (21)…

3 0 0
இலங்கை செய்திகள்

சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்குப் பிணை!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான்…

38 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்குச் செல்வோருக்கு விசேட அறிவுறுத்தல்!

தற்போது நிலவும் டெங்கு பரவல் நிலைமை காரணமாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் சிறுவர் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக…

74 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டுமொரு போர் ஏற்படாது! – ஐரோப்பியத் தூதுக்குழுவினரிடம் வடக்கு ஆளுநர் திட்டவட்டம்

“இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான…

54 0 0